வவுனியா பட்டக்காடு பகுதியில் கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வாளரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இன்று (09) அதிகாலை 12.15 மணியளவில்...
வவுனியா பட்டக்காடு பகுதியில் கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வாளரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
வவுனியா பட்டக்காடு பகுதியில் போதைப்பொருள் சந்தேக நபர்களை பிடிப்பதாக குறித்த இராணுவ புலனாய்வாளர் சென்ற சமயத்தில் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
அவர்களை துறத்திச் சென்ற சமயத்தில் பொது இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற பொதுக்கிணற்றில் தவறி வீழ்ந்து இராணுவ புலனாய்வாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
கிணற்றில் சடலம் கிடப்பதினை அவதானித்த அயலவர்கள் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை மீட்டெடுத்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மாத்தறை பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.