யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொட மீன் சந்த...
யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று (26) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் கடந்த வாரம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேரில் ஒருவர் பருத்தித்துறை என்றும் மற்றையவர் குருநகர் என்றும் அறியமுடிகின்றது.
வடக்கிலிருந்து பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கொண்டு சென்ற கூலர் வாகனச் சாரதிகள் மூவர் கொரோனாத் தொற்றுக்கு உட்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் குருநகர், பருதித்தித்துறை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த மூவரே கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந் நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையிலேயே அவர்களுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியல்கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவரும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றுக்குள் உறுதி செய்யப்பட்டுள்ளன.