புதிய தனிமைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை வர்த்தமானியின் கீழ் கொழும்பு, கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை பகுதிகளில் முககவசம் அணியாத 39 பே...
புதிய தனிமைப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை வர்த்தமானியின் கீழ் கொழும்பு, கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை பகுதிகளில் முககவசம் அணியாத 39 பேரையும், சமூக தூரத்தை பராமரிக்காதவர்களையும் பொலீசார் கைது செய்தனர்.
முதற்தடவையாக பொலிஸார் முககவசம் அணியவில்லை என்ற காரணத்தால் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முககவசங்களை அணிவதோடு சமூக இடைவெளியை பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.