யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பாண்டியன்தாழ்விலிருந்து கனடா போவதற்காக சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டமையினால் அவருடன் பழகிய 12 குடும்ப...
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பாண்டியன்தாழ்விலிருந்து கனடா போவதற்காக சென்ற ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டமையினால் அவருடன் பழகிய 12 குடும்பங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைப் பரப்பிற்குள் அடங்கும் பாண்டியன்தாழ்வு கிராமத்திற்கு இரு மாதங்களின் முன்னர் கனடாவில் இருந்து வருகை தந்த ஒருவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியிருந்தார்.
இருப்பினும் மீண்டும் கனடா திரும்பும் முயற்சிக்காக ஒக்டோபர் மாதம் கொழும்பு சென்று வந்துள்ளார். கடந்த 9ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கு பயணித்து 11ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கனடா வாசிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதனால் அவருடன் பழகியவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குள் 12 குடும்பங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ளவர்களுக்கு எழுமாற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டவர்களில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், ஓர் பெண் சட்டத்தரணி ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.