இலங்கையில் மேலும் 169 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களுடன் 15...
இலங்கையில் மேலும் 169 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களுடன் 151 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் 18 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இன்றைய தினம் 443 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,709 ஆக அதிகரித்துள்ளது.