கோப்பாய் கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி...
கோப்பாய் கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியினால் கொரோனா தடுப்பு ஆலோசனை மற்றும் நோய் நிர்ணய அட்டைகள் வழங்கப்பட்டதுடன் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தலைவரின் சம்மதத்துடன் ஒவ்வொருவருக்கும் கல்லூரியில் இருந்த வேப்பமரகன்று வழங்கி வைக்கப்பட்டது.