நேற்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 322 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. க...
நேற்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 322 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 2 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.