நாட்டில் கொரோனா நிலைமை காரணமாக அரசு பாடசாலைகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால், திட்டமிட்டப...
நாட்டில் கொரோனா நிலைமை காரணமாக அரசு பாடசாலைகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலால், திட்டமிட்டபடி பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாது என்று அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்தார்.
நவம்பர் 9 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்ட நிலையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத ஆரம்பத்தில் இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதால் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சகம் கடந்த வாரம் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை கோரியது. இறுதி முடிவு சுகாதார அமைச்சின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் விரைவில் பாடசாலைகளை மீண்டும் திறக்க சுகாதார அதிகாரிகள் அனுமதிப்பது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.