கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய சமூக கட்டமைப்பை அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ்...
கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய சமூக கட்டமைப்பை அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்று வருகின்ற குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்ட இணைப்புக்குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோருடன் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டுள்ள குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளநொச்சி மாவட்டங்களின் சமூக கட்டமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னதாக நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை தரிசித்தமை குறிப்பிடத்தக்கது.