உடுவில் சுகாதார அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இருவர...
உடுவில் சுகாதார அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண் ஒருவருக்கும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மூவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவிலில் இன்று கண்டறியப்பட்ட தொற்றாளருக்கும், அந்தப் பகுதியில் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொற்றாளர்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுவிலில் இன்று கண்டறியப்பட்ட தொற்றாளர் தனிமைப்படுத்தலில் இருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.