இன்று காலை நாட்டில் இரு பெண்கள் 22ஆவது மற்றும் 23 ஆவது கொரோனா மரணம் பதிவானதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்தது. இந்த நிலையில் அரசாங்க த...
இன்று காலை நாட்டில் இரு பெண்கள் 22ஆவது மற்றும் 23 ஆவது கொரோனா மரணம் பதிவானதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்தது.
இந்த நிலையில் அரசாங்க தகவல் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கொழும்பு ஜம்பட்டா வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 68 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாகவும் இது 22 வது கொரோனா வைரஸ் காரணமான மரணம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இவர் நேற்று முன்தினம் 1 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நிமோனியா நோயும் இருந்துள்ளது.
இதற்கு முன்னதாக காலை 10.45 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவலின் படி 22, 23 வது மரணம் நிகழ்ந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சுகாதார அமைச்சு 22 ஆவது மரணம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. 23 ஆவது மரணம் குறித்து தகவல் இதுவரை வெளியிடவில்லை. இதனால் பலரும் குழப்பமடைந்துள்ளனர்.