மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ் தேசிய க...
மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
தமிழ் தேசிய கட்சிகளின் சர்வகட்சிக்கூட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான
சீ.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் தமிழ் தேசிய கட்சிகள் இன்று கூடி முக்கிய இரண்டு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து இருக்கின்றன. தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் மாவீரர் நாள் நினைவேந்தல் என்பன ஆகும்.
மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதுடன் அதுகுறித்து இன்னும் சில தினங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கின்றோம். அதேசமயம் இது தொடர்பில் அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம், உட்பட பல கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.