அங்கொட ஆதார வைத்தியசாலை- தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கொரோனா தொற்றாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை ...
அங்கொட ஆதார வைத்தியசாலை- தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு கொரோனா தொற்றாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண்ணும், அவரது மகனுமே தப்பிச் சென்றுள்ளனர்.
அவர்கள் எஹலியகொட பகுதியை சேர்ந்தவர்கள்