யாழ்ப்பாண நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும், பயங்கரவாத இயக்கத்தை மீள கட்டி எழுப்ப துண...
யாழ்ப்பாண நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும், பயங்கரவாத இயக்கத்தை மீள கட்டி எழுப்ப துணைபோகிறார்கள் என்கிற அடிப்படையில் பலரின் பெயர் குறிப்பிட்டு பொலிசார் தாக்கல் செய்த வழக்கில் இன்று சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் ஆஜராகினார்.
போலீஸ் தரப்பினரால் பெயர்
குறிக்கப்பட்டவர்களில் கஜேந்திரகுமார் , கஜேந்திரன் , சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இருந்தனர். இதன்போது தனக்காக பேசிய சுமந்திரன் , மக்கள் சார்பாக வாதாடும் சட்டத்தரணி ஒருவரை , மக்களுக்காக வாதாடும் சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக குற்றம் சாட்டும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறதா ? எனக்கு எதிராக சாட்சி சொல்ல நீங்க தயாரா ? என்று சூடான வாதத்தை சுமந்திரன் மேற்கொள்ளவே பொலிஸ் தரப்பினர் பதில் சொல்ல தெரியாமல் தடுமாறி நின்றார்கள்.
உலகில் பின்பற்றப்படாத அநாகரிகமான முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். எனவே அந்த வழக்கை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் அல்லது வழக்குத் தொடுனர மீளப்பெற வேண்டும்.
பொலிஸ் சீருடைய அணிந்து வந்து எங்களை முட்டாள்கள் ஆக்காதீர்கள். யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைச்சர்கள் உட்பட 250 பேருக்கும் மேற்பட்டோருடன் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அது பொலிஸ் கண்களுக்குத் தெரியவில்லையா. அந்தக் கூட்டங்களுக்கு நானும் சென்றிருந்தேன். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிவிட்டேன் என்று என்னை இன்று வரை பொலிஸார் கைது செய்யவில்லை.
இவ்வாறான வழக்கு அடிப்படையிலேயே பிழையானது , இந்த வழக்கு திரும்ப பெற வேண்டும் என்றும் சுமந்திரன் வாதாடினார்.
ஆனாலும் அதை திரும்ப பெற பொலிசார் மறுத்த காரணத்தால் அந்த வழக்கு வருகிற 23 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.