யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கார்த்திகை விளக்கீட்டினை மேற்கொள்ள முயன்ற மாணவர்களை தடை செய்யும் முகமாக குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இரா...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கார்த்திகை விளக்கீட்டினை மேற்கொள்ள முயன்ற மாணவர்களை தடை செய்யும் முகமாக குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருகையில் தமிழர்களின் கலை கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட கார்த்திகை தீபத்தினை வருடாந்த வழக்கத்திற்கு அமைவாக யாழ் பல்கலை மாணவர்கள் ஏற்ற முற்பட்ட வேளையில் பல்கலை நிர்வாகத்தினால் குறித்த ஏற்பாடு தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிசாரும் யாழ் பல்கலைக்கழக முன்றலில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவீர்ர் நினைவேந்தலுக்கு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையானது நாளை வரை தொடரும் நிலையில் பல்கலை முன்றலிலோ வளாகத்திலோ விளக்கீட்டை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்து.