ஒரு லட்சம் பேருக்கு காணித் துண்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வரும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் மக்களை விண்ணப்பிக்க உற்சா...
ஒரு லட்சம் பேருக்கு காணித் துண்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வரும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் மக்களை விண்ணப்பிக்க உற்சாகப்படுத்த தவறிவிட்டதாக யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இரத்தினம் முரளிதரன் குற்றம் சாட்டினார்.
நேற்று யாழ் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில், தயவு செய்து வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ள 17 வயதிற்கு மேற்பட்டவர்களிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சுற்று நிருபத்தில் 18-45 வயது எல்லை போட்டாலும் தொழில் முனைவோராக இருந்தால் வயதெல்லை கணிக்கப்படாது என சுற்று நிருபம் சொல்கிறது.
வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு இருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கட்டும் அல்லது அரசியல் கட்சிகளாக இருக்கட்டும் யாருமே முழுமையாக கரிசனை காட்டவில்லை.
ஒரு மாதத்திற்கு முன்னர் சில அரசியல் அமைப்புகளிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் குறித்த விடயம் தொடர்பில் அக்கறை காட்டுமாறு கூறினேன் அவர்களும் அக்கறை காட்டவில்லை. இது வேதனையான விடயம்
உண்மையில் தங்களுடைய அரசியல் தேவைக்கு மட்டும் மக்களிடம் வந்து கொண்டு இருந்தார்கள். ஆனால் எமது நிலம் பறிபோகப் போகிறது.
அரசின் இலக்கு ஒரு லட்சம் மக்களுக்கான காணித்துண்டுகளை தொழில் முயற்சிக்கு ஏற்ப ஒருவருக்கு 10 ஏக்கரும் போகலாம். குறிப்பாக விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திக்கு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பு ஏற்றுமதி இறக்குமதி விவசாயம் சிறுவியாபாரம் அபிவிருத்தி சம்பந்தப்பட்டவர்கள் , கைத்தொழில் துறை , நன்னீர் மீன் வளர்ப்பு அலங்கார மீன் வளர்ப்பு, அலங்கார பூக்கள் வளர்ப்பு துறை வர்த்தக பிரிவு பலசரக்குதுறை என பல துறைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
மக்கள் எல்லோரும் விண்ணப்பிக்கிறார்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கும் போது அதற்கான திட்டவரைபு வழங்க வேண்டும்.
இனியாவது தயவுசெய்து இந்த அரசியல் கட்சிகள் மக்களுக்கான திட்ட வரைபுகள் எப்படி செய்வது என்பதை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து இந்த திட்டத்திற்குள் மக்களை கொண்டு போக வேண்டும். குறிப்பாக சகல அரசியல் கட்சிகளும் பிழை விட்டு விட்டார்கள் 2015 - 2019 வரை அரசியலில் இருந்த அரசியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிந்து இருக்கும் அவர்கள் ஏன் இதை மக்களுக்கு நிறைவேற்றவில்லை என்பது தான் எனது கேள்வி ?
இதில் இன்னும் ஒரு சிக்கல் இருக்கிறது பெரும்பாலான காடுகள் அழிக்கப்படும் போது அங்கு எல்லைப் பிரச்சனை இருக்கிறது காணி விடயத்தில் தமிழ் மக்கள் எல்லோரும் விண்ணப்பிக்க வேண்டும் இந்த காணி வழங்கும் திட்டம் 5 வருடத்திட்டம் ஆகும். ஒரு வருடம் 20 ஆயிரம் பேர் வீதம் 5 வருடத்தில் ஒரு லட்சம் பேருக்கு வழங்கும் திட்டமாகும்.
மாந்தை மேற்கு, மாந்தை கிழக்கு வவுனியா வடக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுரைப்பற்று, பச்சிலைப்பள்ளி, பளை ஆகிய பிரதேச செயலகங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தை பொறுத்தவரை மிகுதி பிரதேச செயலகங்கள் உள்ளடக்கப்படவில்லை
அதே நேரத்தில் இந்த காணிகள் பெற்றுக் கொடுப்பதற்கு மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய பொறுப்பு எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தான் உள்ளது வடமாகாண அபிவிருத்திக்கு பொறுப்பாக இருக்கும் அங்கஜன் இராமநாதன் தேர்தல் பிரச்சார காலத்தில் 62 , 63 கோடிகளை செலவழித்ததாக சொல்லப்படுகிறது.
மாவட்ட செயலகத்தில் அவரது பெயரில் அலுவலகம் ஒன்று இருக்கிறது இந்த விடயம் தொடர்பாக சொல்லவில்லை. அங்கஜனுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அலுவலகம் உள்ளது. அவர்களும் உருப்படியாக செய்யவில்லை பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் செய்திருக்க வேண்டும் .
ஆகவே எல்லோரும் தவறி விட்டனர் இவர்கள் தமது பதவிகளுக்காக வந்தார்கள் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.