நாளை மற்றும் நாளை மறுதினம் என இரு நாட்கள் அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கை...
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரு தினங்களும் அரச விடுமுறை தினங்களாக அமைந்துள்ளமையினை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல், தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அலுவலக ரயில் சேவைகள் மற்றும் பிராந்திய ரயில் சேவைகள் ஆகியன வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்துக்கான அனைத்து பஸ் சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.