பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. இந்த வரவு செலவுத் திட்டமானது முழு ...
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. இந்த வரவு செலவுத் திட்டமானது முழு மக்களையும் ஏமாற்றுகின்ற வகையிலேயே அமைந்துள்ளது. அதிலும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எந்தவித பிரயோசனமும் கிடையாது.
இவ்வாறு தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முக்கியஸ்தருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடு கடலுக்குள் மூழ்கி இருக்கின்ற நிலையில் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள நிதிகளை பெற்றுக் கொள்வதாக இருந்தால் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த பட்ஜெட் இலங்கைக்கு சாதகமாக அமையுமா அதேபோல் தமிழ் மக்களுக்கு ஏதாவது விதத்தில் உதவிக்கரமாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
3 இலட்சத்து 44ஆயிரத்து நூறு கோடி ரூபா அடுத்த நிதியாண்டுக்கான செலவீனமாக கூறப்பட்டுள்ளது ஆனால் அதேநேரத்தில் இந்த நாட்டுக்குக்கு கிடைக்கவோண்டிய வருமானம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 600 கோடி ரூபா வருமானமாக ஆகவே செலவீனத்திலும் பார்க்க வருமானம் மிகக் குறைவாக இருக்கின்றது.
இதில் துண்டுவிழும் தொகையாக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 600 நூறுகோடிரூபா அவர்களிடம் பணம் இல்லாத நிலை காணப்படுகின்றது இந்தப் பணத்தை அவர்கள் எங்கிருந்தே எதிர்பார்க்கிறார்கள்.
இது கிடைத்தால் தான் 3 இலட்சத்து 44ஆயிரத்து நூறு கோடி ரூபா செலவீனம் பூர்த்தியாகும் இப்போது கேள்வி என்னவென்றால் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 600 நூறுகோடிரூபாவை எவ்வாறு பெற்றுக்கொள்வார்கள் என்பது கேள்வி.
மேலும் ஏற்கனவே பெற்றிருக்கக்கூடிய கடன்கள் இலங்கையின் உள் நாட்டுக்கடன்களாக பெற்றுக் கொண்ட பணங்கள் 7 ஆயிரத்து 708 பில்லியன் ரூபா சர்வதேச கடன்களாக 13 .4பில்லியன் அமெரிக்க டெலர்கள் இவர்களின் உள்நாட்டுக்கடன்கள் என்பதும் மிக அதிக பட்சக் கடன்களாகவுள்ளது.
இத்தகைய நிலையில் தான் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டள்ளது. ஏற்கனவே பிரதமராக தெரிவுசெய்யப்பட்டதுடன் இந்தியாவிடம் முதலாவதாக விடுத்த கோரிக்கை கடன்களை மீளச்செலுத்துவதற்கான கால எல்லைக்கான அவகாசத்தை கோரியிருந்தார்.
இதேபோல்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு அல்லது ஏனைய நாடுகளுக்கு செலுத்தவேண்டிய கடன்கள் தொடர்பில் அதன் வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை.
நாட்டின் செலவீனத்திற்காக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 600 நூறுகோடிரூபா கடன்பட வேண்டியுள்ளது. அதேவேளை கடன்களை கட்டுவதற்கு பல்லாயிரம் கோடிரூபா தேவையாகவுள்ளது. இவை இரண்டுக்குமான வருமானம் என்பது மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நட்டின் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்றுமதிகள் இறக்குமதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் இவர்கள் குறிப்பிட்ட வருமானமே வருமா என்பது கேள்வியாகவுள்ளது. இவர்கள் ஐ.எம்.எவ்,வேள்ட் விசன் , ஜெய்க்கா போன்ற பல்வேறு பட்ட கடன் நிறுவனங்களிலிருந்து கடனைப் பெற முயற்சிக்கிறார்கள்.
இந்த நிறுவனங்களிடம் இருந்து கடன்கள் கிடைக்குமா என்பது கேள்வி கடன்களை திருப்ப அடைக்குமா என்ற பிரச்சினை இருக்கக்கூடிய சூழ்நிலையில் தொடர்ந்தும் வாங்குவார்களானால், இலங்கை திவாலான நாடாக மாறும். எந்த அபிவிருத்திகளையும் செய்யமுடியாத நாடாக மாறும் அதற்கான வாய்ப்புக்களே அதிகம். ஏற்கனவே சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பி அடைக்கமுடியாத காரணத்தினால் தான் அப்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு 99 வருட கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தான் போட்சிட்டி சரி அரைவாசி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏன் இவர்களால் இந்தக் கடன்களை வழங்கமுடியவில்லை இத்தகைய நிலையில் இலங்கைக்கு உதவவேண்டிய நிலையில் சீனாவிற்கேயுள்ளது.
அவர்களுக்குத்தான் இலங்கையை வைத்துக் கொள்ளவேண்டிய பூகோள தேவையுள்ளது இதற்காக சீனா அரசாங்கம் இலங்கைக்கு உதவி செய்ய வரலாம் இல்லாது விட்டால் மிலேனியம் ஒப்பந்தத்தை அமேரிக்காவுடன் ஏதும் இவர்களுக்கு கிடைக்கலாம். அதுவும் போதியதாக இருக்காது.
ஆகவே இந்த வரவுசெலவுத் திட்டமானது இலங்கையில் இருக்கின்ற இறையாண்மை இலங்கையிடம் இருக்குமா அல்லது வேறு நாடுகளுக்கு தாரைவார்க்கப்போகிறார்களா என்பது போன்றுதான் இருக்கின்றது.
அவ்வாறான நிலையில் காணிகளை விலைக்கு விற்பார்கள் வருமானம் வருவதற்கு எதை எல்லாம் விற்பார்களே அனைத்தையும் விற்பதற்கு தயாராக இருப்பார்கள்.
இவர்களிடம் இருக்கின்ற வெளிநாட்டுக் கொள்கை என்பது ஐரோப்ப அமெரிக்க நாடுகளுக்கோ அல்லது இந்தியாவுக்கோ ஏற்புடையது அல்ல இவர்களுக்கு கடன்கள் கிடைக்குமாக இருந்தால் இவர்களின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படவேண்டும்.
அந்த மாற்றங்கள் ஏற்படும் என்பது மிகக்குறைவு அத்தகை நிலையில் இலங்கை திவாலான நாடாக மாறுகின்ற வழிமுறைகள் காணப்படுகின்றது. இதற்கு சாதகமாகத்தான் கொரோனா வைரசும் காரணியாக அமைகின்றது.
இத்தகைய சூழலில் தமிழ் மக்களுக்கு ஏதாவது பயன் இருக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது. முதலீடுகளை செய்வதற்கு பலனில்லை. ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு கூட சாத்தியமில்லாத நிலையே காணப்படுகின்றது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் பயனற்றதாகவே இது உள்ளது.இது மக்களை ஏமாற்றுகின்ற வரவுசெலவுத் திட்டமாகும். என்றார்.