கிளிநொச்சியில் மேலும் நான்குபேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கிளிநொச்ச...
கிளிநொச்சியில் மேலும் நான்குபேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் முதியவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அவருடைய ஒயில் விற்பனை நிலையத்துக்கு அருகாக தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தினைச் சேர்ந்த நால்வருக்கே இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் தென்பகுதிக்கு பல தடவைகள் தண்ணீர் கொள்வனவிற்காக சென்றுவந்தவர்கள் என்று தெரியவருகிறது.