மக்களுக்கான செயற்றிட்டங்கள் மற்றும் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல தவிசாளர் பதவியில் தொடர்ந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக...
மக்களுக்கான செயற்றிட்டங்கள் மற்றும் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல தவிசாளர் பதவியில் தொடர்ந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனக்கு பிரயோகிக்கப்பட்ட சில அழுத்தங்கள் காரணமாக எனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பாக எமது கட்சி தலைமைக்கும் ஊடகங்களுக்கும் அறிவித்திருந்தேன்.
இந்த நிலையில் மக்களுக்கான செயற்றிட்டங்கள் மற்றும் அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து
செல்வதென்ற வகையில் தவிசாளர் பதவியில் தொடர்ந்து செயற்படுவேன் என்றும் இதனால் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.