யாழ்ப்பாணம் பரிசோதனைக்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ...
யாழ்ப்பாணம் பரிசோதனைக்கூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் மருதனார்மடம் கொத்தணியைச் சேர்ந்த 5 பேர் மல்லாகத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 120 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 481 பேருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவற்றில்,கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த ஒருவருக்கும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த ஒருவருக்கும் தெல்லிப்பழை சுகாதார அதிகாரி வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த எண்மருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களில் ஐவர் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் கிளிநொச்சியில் உறுதிப்படுத்தப்பட்டவர் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்பத்தினைச் சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தொற்றுக்குள்ளான குறித்த நபர் கொழும்பு சென்று திரும்பும் சாரதியாவார். அவர் கொழும்பு சென்றிருந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றுக்கான அறிகுறி காணப்பட்டபோதிலும் 100 வீதம் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் அறிந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் பாரதிபுரத்தில் உள்ளஅவருடைய உறவினர்களுக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் நேற்று இருவரும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
நேற்று கிளிநொச்சி திரும்பிய குறித்த சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 481 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டன. இதன்படி 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை - 2
சிறுவிழான் - 1
மல்லாகம் 5 ( ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்)
பாரதிபுரம் / கிளிநொச்சி- 1