நாடு முழுவதும் ஒரு லட்சம் காணி விநியோகம் செய்யும் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்த...
நாடு முழுவதும் ஒரு லட்சம் காணி விநியோகம் செய்யும் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் காணி விநியோகம் செய்வதற்காக கோரப்பட்ட விண்ணப்பத்தினை ஆராய்ந்து அவர்களிற்கான நேர்முகத் தேர்வினை நடாத்தி பட்டியலைத் தயார் செய்து முன்னுரிமைப்படுத்துவது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி கருத்து தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றிற்கு அமைய தற்போது விண்ணப்பித்தவர்களில் ஒரு ஏக்கருக்கும் குறைவாக விண்ணப்பித்தவர்களிற்கும் வதிவிட பிரதேச செயலாளர் பிரிவிற்குள் காணி கோரியவர்களிற்கே முதலில் நேர்முகத் தேர்வினை நடாத்தி தகுதியானவர்களை இனம் கண்டு பட்டியிலுடுவதோடு அடுத்த கட்டமாக எஞ்சியவர்களிற்கான நேர்முகத் தேர்வினை நடாத்துதல்.
காணி கோரி விண்ணப்பித்தவர் வசிக்கும் பிரதேச செயலாளர் பிரிவிலேயே நேர்முகத் தேர்வினை நடாத்துவதன் மூலமே விண்ணப்பதாரிக்கு வேறு நிலம், முயற்சி நிலமை தொடர்பான விபரங்களை உறுதிப்படுத்த முடியும் என்பதனால் வசிக்கும் பிரதேச செயலகத்திலேயே நேர்முகத் தேர்வினை நடாத்துதல்.
ஒரே குடும்பத்தில் எத்தனைபேர் விண்ணப்பித்திருப்பினும் முதல் கட்டமாக ஒருவருக்கு மட்டுமே சிபார்சு செய்தல். போன்ற தீர்மானங்கள் மாவட்டச் செயலாளர் தலைமையில் எட்டப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில், காணி ஆணையாளர், உள்ளூராட்சி ஆணையாளர், தெங்கு அபிவிருத்திச் சபை,என பல திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.