கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிக் கொண்டுவரப்பட்ட சுமார் 230 கிலோ மாட்டு இறைச்சியை பாதுகாப்புத் தரப்பினர் நேற்றைய தினம் இரவு கைப்பற...
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிக் கொண்டுவரப்பட்ட சுமார் 230 கிலோ மாட்டு இறைச்சியை பாதுகாப்புத் தரப்பினர் நேற்றைய தினம் இரவு கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சியிலிருந்து வாகனம் ஒன்றின் மூலம் யாழ்ப்பாணம் நோக்கி சங்குப்பிட்டி பாதை வழியாக எடுத்து வந்தனர்.
அவ்வீதியில் கடமையில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை இடப்பட்ட போதே இவ்வாறு பெருந்தொகையான மாட்டு இறைச்சி இருப்பதை அவதானித்தனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.