இலங்கையில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுள் 285 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்...
இவர்களுள் 285 பேர் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏனைய 77 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 590 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 36 ஆக அதிகரித்துள்ளது.