ஹெரோயின் மற்றும் 59 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக ப...
அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடுவெல, மாலபே மற்றும் வெலிவிட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினூடாக அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. கைதானவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை 106 கிரேம் 680 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லேரியா ஹிம்புட்டான பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. 33 வயதான சந்தேக நபர் முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்தவரென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிட்டம்புவ பகுதியில் ஐந்து கிலோ கிரேம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் அதனை கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் 53 வயதான குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.