இன்றைய தினம் புதன்கிழமை (டிச.16) யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர் 100 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.இதன் போ...
இன்றைய தினம் புதன்கிழமை (டிச.16) யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர் 100 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.இதன் போது 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
சங்கானையை சேர்ந்த நான்கு பேருக்கும்
உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும்
பண்டத்தரிப்பைச் சேர்ந்த ஒருவருக்கும்
மானிப்பாயைச் சேர்ந்த ஒருவருக்கும்
வடலியடைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மருதனார்மடம் கொத்தணி மூலம் 64 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.