மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்துள்ள கைதிகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் ஏற...
மஹர சிறைச்சாலை அமைதியின்மை சம்பவத்தில் உயிரிழந்துள்ள கைதிகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுள் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை பி சி ஆர் பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் கடந்த 29 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதிகள் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 106 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.