கொரோனா பெருந்தொற்றினால் தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட ஹற்றன் நஷனல் வங்கியின் நீண்டகால வாடிக்கையாளர்களாகவுள்ள தொழில் முயற...
கொரோனா பெருந்தொற்றினால் தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட ஹற்றன் நஷனல் வங்கியின் நீண்டகால வாடிக்கையாளர்களாகவுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களின் தொழில் முயற்சிகளை மீள உருவாக்குவதற்கான நன்கொடை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள வடபிராந்திய கிளையில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் 200 பேருக்கு முதற்கட்டமாக வழங்கப்படவுள்ள நிலையில் வடபிராந்தியத்தில் 28 தொழில் முயற்சியாளர்கள் இந்த நன்கொடைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்றைய நிகழ்வில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சமூக இடைவெளி கருத்தில் கொண்டு நான்கு பேருக்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இணையவழியில் சிறிய - நடுத்தரத் தொழில் முயற்சிப் பிரிவின் தலைவர் சிரேஷ்ட முகாமையாளர் கை. இந்திரவாசன் கலந்துகொண்டார்.
இதேவேளை வடபிராந்திய வியாபார நடவடிக்கைக்கான சிரேஷ்ட முகாமையாளர் க.வாதுளன், கடன் வழங்கல் பிரிவின் வடபிராந்திய முகாமையாளர் ம.தயாகரன், வியாபார விருத்திக்கான மனித வளப்பங்காண்மைப் பிரிவின் தலைவர் சிரேஷ்ட முகாமையாளர் சி.சுந்தரேஸ்வரன், தொழில் முயற்சிக் கடன் பிரிவின் அலுவர்கள் கலந்துகொண்டனர்.