மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று திறக்கப்படுகிறதென இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ...
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று திறக்கப்படுகிறதென இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இன்று இடம்பெறும்.
மீள்புதுப்பிக்கத்தக்க வலு சக்தியின் பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் விசாலமான காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று மன்னாரில் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .
மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின் உற்பத்தி மையம் அமைந்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.