சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற திருகோணமலைச் சேர்ந்த நபரும் அவரை கொண்டு சென்ற பருத்தித்துறைச் சேர்ந்த ஓட்டியும் நேற்று...
சட்டவிரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவுக்கு சென்ற திருகோணமலைச் சேர்ந்த நபரும் அவரை கொண்டு சென்ற பருத்தித்துறைச் சேர்ந்த ஓட்டியும் நேற்று வியாழக்கிழமை அதிகாலை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் திருகோணமலையைச் சேர்ந்த துரைராசா லட்சுமணன் மற்றும் பருத்தித்துறை இன்பசிட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட படகோட்டி ஏற்கனவே கடத்தல் சம்பவங்களுடன்
தொடர்புபட்டவராக கருதப்படுவதுடன் அவரிடமிருந்து பணநோட்டுகளும் கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.