மன்னார் வளைகுடாவில் வலுக்குறைந்து தாழமுக்கமாக மாறியுள்ள புரேவி புயலானது கடற்பகுதியில் அழிவடைந்து வருகின்றது. எனினும் எதிர்வரும் புதன்கிழமை ...
மன்னார் வளைகுடாவில் வலுக்குறைந்து தாழமுக்கமாக மாறியுள்ள புரேவி புயலானது கடற்பகுதியில் அழிவடைந்து வருகின்றது.
எனினும் எதிர்வரும் புதன்கிழமை வரை வடக்கு மாகாணத்திற்கு மழை கிடைக்க வாய்ப்புண்டென புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் கனமழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.