வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார். தெல்லிப்பழை...
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.
தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்
குறித்த ஊழியர் மின்மோட்டார் இயக்கும் கடமையினை புரிபவரே தவிர பிரதேச சபை ஊழியர்களோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்கவில்லை குறித்த ஊழியர் வலி வடக்கு பிரதேச சபையின் தெல்லிப்பளை உபஅலுவலகத்தில் கடமை புரிகின்றார்.
குறித்த நபர் மருதனாமடம் சந்தைக்கு மரக்கறி கொள்வனவு செய்வதற்காக சென்று வந்ததன் காரணமாக தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குறித்த ஊழியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக வடக்கு பிரதேச சபையின் செயற்பாடுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது குறித்த நபருடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்களை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தனிமைப்படுத்தும் செயற்பாட்டில் முன்னெடுத்துள்ளனர்
வலிவடக்கு பிரதேச சபையின் செயற்பாடுகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை எனவும் வழமைபோல் சேவைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.