டெங்கு நுளம்பு பரவாமல் தங்களது வீட்டையும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் போதி வழங்கப்படும் என கியூமெட...
டெங்கு நுளம்பு பரவாமல் தங்களது வீட்டையும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் போதி வழங்கப்படும் என கியூமெடிக்கா நிறுவன திட்ட இணைப்பாளர் ந.நல்லசிங்கம் தெரிவித்தார்.
ஹியூமெடிக்கா சர்வதேச தொண்டு நிறுவனத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊர்காவற்றுறை பிரதேச மக்களுக்கு நேற்று முன்தினம் நுளம்பு வலைகள் போர்வைகள் வழங்கிவைக்கப்பட்டது
பிரதேச செயலகத்தினரால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந் நிறுவனத்தால் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உரையாற்றிய தொண்டு நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறே நாம் தற்போது ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 200 குடும்பங்களுக்கான நுளம்பு வலைகள் 100குடும்பங்களுக்கு போர்வையினையும் வழங்கிவைத்துள்ளோம்.
மேலும் நீர்த்தோக்கம் காரணமாக டெங்கு நுளம்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் திட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனமான நாம் எதிர்காலத்தில் டெங்கு நுளம்பு பரவாமல் தங்களது வீட்டையும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் குடும்பங்களை ஊக்குவிக்கும் முகமாக டெங்கு நுளம்பு பரவாமல் தங்களது வீட்டையும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கவுள்ளோம்.
இதற்காக ஒரு குழு அமைத்து அந்த குழுவினர் வீடுகளை பார்வையிடும் போது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ள வீட்டாருக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கவுள்ளோம் என்றார் .
இந்நிகழ்வில் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் கிராம அலுவலர் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.