வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைது செய்யும் விவகாரத்தில், வரும் புதன்கிழமை பொலிசாரை மன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்...
வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைது செய்யும் விவகாரத்தில், வரும் புதன்கிழமை பொலிசாரை மன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதேசசபைக்கு உட்பட்ட வீதியை, பிரதேசசபையின் அனுமதி பெறாமல்- அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டு, அங்கஜன் இராமநாதன் அடிக்கல் நாட்டியிருந்தார். சபையின் முன்னனுமதி பெற்று பணியை மேற்கொள்ளுமாறு, வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு எழுத்துமூலம் அறிவித்த தவிசாளர், அதை திணைக்களம் கணக்கிலெடுக்காததையடுத்து, அனுமதியின்றி நாட்டப்பட்ட பெயர்பலகைகளை அகற்றியிருந்தார்.
இது தொடர்பில் பொலிசார் குற்றவியல் வழக்கை பதிவு செய்து, தவிசாளர் நிரோஷை கைது செய்ய முயன்றபோது, அதற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தை நிரோஷ் நாடியிருந்தார்.
இதன்போதே, பொலிசாரை மன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், வி.திருக்குமரன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகினர்.