முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ம் ஆண்டு நினைவுநாள் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடைபெற்றது. இதி...
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ம் ஆண்டு நினைவுநாள் யாழ்ப்பாணத்தில் இன்று மாலை நடைபெற்றது.
இதில் சட்டத்தரணியும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான விஷ்வலிங்கம் மணிவண்ணன் , யாழ் மாவட்ட அமைப்பாளர் சிவகுரு இளங்கோ மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இவர் டிசம்பர் 24, 2005 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர். தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய அன்னாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் மாமனிதர் விருது வழங்கப்பட்டது. மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது துப்பாக்கிதாரிகளால் பரராஜசிங்கம் சுடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.