வலி.வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது முக கவசத்தினால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக இளவாலைப் பொலிஸ் ...
வலி.வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் மற்றும் அவரது சாரதி மீது முக கவசத்தினால் தாக்குதல் நடாத்தப்பட்டதாக இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் இளவாலை வசந்தபுரம் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் தாக்கியவரின் பெயர் விபரங்கள் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்படவில்லை என போலீசாரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளவாலை சேந்தாங் குளம் பகுதியில் வெள்ளவாய்க்கால் அமைக்கும் பணியினை பார்வையிட்டு விட்டு வீடு திரும்பும் போதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது வலி.வடக்கு தவிசாளர் வாகனத்தில் அமர்ந்திருந்த பக்கமே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரம் தாக்குதல் நடத்தினர் என கருதப்படும் ஒருவரை இளவாலை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.