வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுமென வள...
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேலும், ஏனைய சில பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசும் சந்தர்ப்பங்களில் பொதுமக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.