நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படுவதாக வடக்குமாகாண ஆளுநரால் அறிவிக்கப்ப...
நாட்டில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படுவதாக வடக்குமாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தினால் புயல் ஏற்படக்கூடிய பாதக நிலை காணப்படுவதன் காரணமாக ஆளுநரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் வடமாகாணத்தின் ஏனைய நான்கு மாவட்ட பாடசாலைகளையும் நாளை வியாழன், நாளை மறுநாள் வெள்ளி என இரு தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளே இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.