தீவகமக்கள் கோடை காலத்தில் வருடாவருடம் எதிர்நோக்கி வருகின்ற குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் முகமாக ஊர்காவற்றுறை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட ...
தீவகமக்கள் கோடை காலத்தில் வருடாவருடம் எதிர்நோக்கி வருகின்ற குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் முகமாக ஊர்காவற்றுறை பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட கரம்பொன் கிழக்கு காளி கோவிலடி புதிய வீட்டுத்திட்டம் என்னும் இடத்தில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் அமைக்கப்பட்ட பொதுக் குடிநீர் கிணறு நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அதிகூடிய வறட்சி நிலவுகின்ற மேலும் இரு இடங்களில் பொதுக்கிணறுகள் அமைப்பதற்கானஆரம்ப வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.