ஆயுர்வேத மருத்துவர் தம்மிகபண்டார கொரோனா பாணி மருந்து விநியோகத்திற்காக பெருமளவு மக்களை ஒரே இடத்தில் கூட்டும் நிலையை ஊக்குவித்தால் அவர் கைது ச...
ஆயுர்வேத மருத்துவர் தம்மிகபண்டார கொரோனா பாணி மருந்து விநியோகத்திற்காக பெருமளவு மக்களை ஒரே இடத்தில் கூட்டும் நிலையை ஊக்குவித்தால் அவர் கைது
செய்யப்படுவாரென கேகாலை சுகாதார மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விதிமுறைகளை மீறியமைக்காக கேகாலை வைத்தியருக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரட்ண தெரிவித்துள்ளார்.
மருந்தினை பெறுவதற்காக பெருமளவு மக்கள் வைத்தியரின் வீட்டின் முன்னாள் காணப்பட்டமை இது இரண்டாவது தடவை என தெரிவித்துள்ள அசேல குணவர்த்தன இதன் காரணமாக புதிய கொத்தணி உருவாகும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும், சுகாதார விதிமுறைகளை பேணவேண்டும் என கேகாலை மருத்துவ சுகாதார அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளாரென அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.