யாழ்.மருனார்மடம் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்ற உடுவிலைச் சேர்ந்த மற்றொருவருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்...
யாழ்.மருனார்மடம் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்ற உடுவிலைச் சேர்ந்த மற்றொருவருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 124 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளானவர் மருதனார்மடம் சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் உடுவிலைச் சேர்ந்தராவார். 14 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று அடையாளம் காணப்படவில்லை. தனிமைப்படுத்தல் நிறைவுபெறும் போது மேற்கொள்ளப்படும் இரண்டாம் கட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பிசிஆர் பரிசோதனைகள் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.