பொன்னாலை வதராஜப் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி மகோற்சவ தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு சுவர்க்கவ...
பொன்னாலை வதராஜப் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி மகோற்சவ தேர்த்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது.
அதிகாலை 3.30 மணிக்கு சுவர்க்கவாயில் தரிசனம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 6.00 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.
ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் 6.40 மணியவில் தேரில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 7.30 மணியளவில் தேர் இருப்பிடம் வந்தது. பச்சை சாத்தப்பட்ட சுவாமி 8.15 மணியவில் ஆலயத்தினுள் சென்றார்.
கொரோனா காரணமாக சுகாதார விதிகளைப் பின்பற்றி பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டனர். பக்தர்கள் ஒரே நேரத்தில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் முகமாக உரிய நேரத்திற்கு முன்பாகவே திருவிழா நடைபெற்று முடிந்ததை குறிப்பிடத்தக்கது.