கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிமைப்படுத்தப்படுத்தப்...
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தனிமைப்படுத்தப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மட்டுப்படுத்தப்பட்ட ஆசன வசதிகளுடன் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
இதற்கமைய, திரையரங்குகளில் 25 சதவீத ஆசனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விதிமுறைகளுக்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திரைப்பட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காணமாக நாட்டின் அனைத்து திரையங்குகளும் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.