கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையை விடுமுறையில் இருந்து கடமைக்கு திரும்பும் பொலிசாரின் சுய தனிமைப்படுத்தலுக்காக வடக்கு கல்வி அமைச்சின்...
கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலையை விடுமுறையில் இருந்து கடமைக்கு திரும்பும் பொலிசாரின் சுய தனிமைப்படுத்தலுக்காக வடக்கு கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் வழங்கப்பட்டமை அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோணா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கொடிகாமப் பொலிசில் கடமையாற்றும் பொலிஸாரே இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
விடுமுறையில் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைக்கு திரும்புவதற்கு முன்னர்
சுயதனிமைப்படுத்தலுக்காக குறித்த பாடசாலையில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலையாக காணப்படுவதால் குறித்த பாடசாலையில் தங்கும் பொலிசாருக்கு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்படுமாயின் குறித்த மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு எவ்வாறு மாணவர்கள் பயன்படுத்த முடியும் என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது குறித்த பாடசாலை தங்கியுள்ள பொலிஸார் பாடசாலைக்கு வெளியில் நடமாடுவதாகவும் அவர்களுக்கு தேவையான உணவுகள் பெரும்பாலும் வெளி இடங்களில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி உயர் அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது குறித்த பாடசாலை பொலிசாரின் கோரிக்கைக்கு அமைய வடக்கு கல்வி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.