அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிய...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது அபிவிருத்தி குழு கலந்துரையாடல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
சிங்களப் பேரினவாத அரசுகள் உடன் கைகோர்த்துள்ளவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென தேர்தல் காலங்களில் கூறிய கஜேந்திரர்கள் இருவரும் குறித்த கலந்துரையாடலில் கூட்டாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் சாள்ஸ், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், தமிழரசுக் கட்சியின் சிறீதரன் மற்றும் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.