முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அரசாங்கம் முட்டாள்தனமான தீர்மானமெடுக்கிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் வெறுப்புக்கு நாம் ஆளாக வேண்டி...
முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அரசாங்கம் முட்டாள்தனமான தீர்மானமெடுக்கிறது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் வெறுப்புக்கு நாம் ஆளாக வேண்டிள்ளது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
விஷேட குழுவொன்றை நியமித்துள்ளார் இதில் அங்கத்தவர்கள் யார்? இவர்களுடைய தகமைகள் என்ன?
விசேட குழுவின் பரிந்துரைகளை மதம் சார்பான பிரதிநிதிகளை ஒன்று திரட்டுங்கள் அவர்களுடைய கோரிக்கைகள் அறிந்து கொள்ளுங்கள். ஆனால் அவ்வாறான திட்டமொன்றை காணவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் எரிக்க சொல்கின்றனர் மற்றொரு சந்தர்ப்பத்தில் குளிரூட்டியில் உடல்களை வைக்கசொல்கின்றனர். இது எவ்வாறான நடைமுறை 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களோடு பிரச்சனை ஒன்று ஏற்படுத்திக் கொண்டதைப் போன்று தற்போது சடலங்களோடும் மோதி அவ்வாறான ஒரு நிலைமையை ஏற்படுத்துகிறார்கள் முட்டாள்தனமான அரசியல் செய்தால் மீண்டும் 1983 ஆம் ஆண்டு போன்ற ஒரு நிலையை ஏற்படுத்திக் கொள்வார்கள்.
இது முஸ்லிம்களுடைய மதம் சார்ந்த உரிமை முஸ்லிம்களுடைய நம்பிக்கை என்னவென்றால் மண்ணிலிருந்தே படைக்கப்பட்டு மண்ணுக்கு உரமாக வேண்டும் என்றே நம்புகின்றனர். இது அவர்களுடைய உரிமை மதம் சார்ந்த உரிமை புதைக்கப்படும்போது அனைவரினது உள்ளங்கள் எரிகின்ற நிலை இது பயங்கரமான நிலை.
இறக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை வைத்து அரசியல் செய்தால் இந்த பிரச்சினை 1000 சஹ்ரான்களை உருவாக்கியதன் பின்னர்தான் நிறைவுக்கு வரும்.
நான் கடந்த 8 வருடங்களாக முஸ்லிம் அடிப்படைவாதம் எவ்வாறு வளர்ந்தது தொடர்பில் கூறுகின்றோம் அதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை நினைவில் வைத்திருங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை தேசிய பிரச்சினை முஸ்லிம்கள் மக்களுடைய பிரச்சினை மத பிரச்சினை உணர்வுபூர்வமானது என தெரிவித்தார்.