மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று (08)முற்பகல் 10....
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் இன்று (08)முற்பகல் 10.30 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் ஆரம்பமான இந்த திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 135 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.
இதற்கமைய, நாட்டின் மின் உற்பத்தியில் மற்றொரு வரலாற்று மைல்கல்லாக ´தம்பபவனி´ காற்றாலை மின் நிலையம் தேசிய கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் முதல் நடவடிக்கையாக 100 மெகாவோட் மின்சாரத்தை இவ்வாரம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ள இந்த மின் ஆலையின் ஊடாக ஒரு அலகு மின்சாரத்தை 8 ரூபாய் என்ற குறைந்த செலவில் உற்பத்தி செய்துக்கொள்ள முடியும் என திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு அதிகாரி வேலு சந்ரேஸ்கரன் தெரிவித்துள்ளார்.