யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் உருவாகி வரும் கொரோனா உபகொத்தணி விரைவாக பரவி வரும் நிலையில், அதனுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகி...
யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் உருவாகி வரும் கொரோனா உபகொத்தணி விரைவாக பரவி வரும் நிலையில், அதனுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் ஒருவர் அளவெட்டி பிரதேசவைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, வைத்தியசாலை 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிக்கு சிகிச்சையளித்த வைத்தியர், பொறுப்பு வைத்தியர் மற்றும் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொற்று அபாய வலயங்களில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் அதிக அக்கறை காண்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.