கோரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மறைப்பதும், தொற்றாளர்கள் தலைமறைவாகித் திரிவதும் குற்றமாகும். அதிகாரிகளும்,...
கோரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மறைப்பதும், தொற்றாளர்கள் தலைமறைவாகித் திரிவதும் குற்றமாகும். அதிகாரிகளும், தொற்றாளர்களும் அசமந்தப் போக்கில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவ டிக்கை எடுக்கவும் முடியும். அதிகாரிகளும் தொற்றாளர்களும் சமூகத்தின் நன்மை கருதிப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் (நேற்றுக் காலையில்) கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 36 என்று கொரோனா தடுப்புக்கான செயலணி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் யாழ்ப்பாணத்தில் 6 பேருக்கே நேற்று தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது எனக் கூறியிருந்தார். அத்துடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற பதிவுமிட்டிருந்தார். எண்ணிக்கை குழப்பம் தொடர்பில் கொரோனா தடுப்புச் செயலணியின் தலைவரான சவேந்திர சில்வாவிடம் கேட்டபோது, அந்தந்த மாவட்டங்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மறைப்பதும், தொற்றாளர்கள் தலைமறைவாகித் திரிவதும் குற்றமாகும். அதிகாரிகளும், தொற்றாளர்களும் அசமந்தப் போக்கில் செயற்பட்டால் அவர்களுக்கு
எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடியும். அதிகாரிகளும் தொற்றாளர்களும் சமூகத்தின் நன்மை கருதிப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். |
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று 36பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், 6 பேர் மட்டுமே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டார்கள் என்று ஊடகங்களில் வெளிவந்த செய்தி தவறானது.
ஊடகங்களுக்குப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், தொற்றாளர்களின் எண்ணிக்கையை ஏன் குறைத்து தகவல் வழங்கினார்கள் என்பது தொடர்பில் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் கவனம் செலுத்தும். கொரோனா என்பது கொடிய நோய். இந்த விடயத்தில் மருத்துவமனை நிர்வாகத்தினரும், சுகாதாரப் பிரிவினரும் பொதுமக்களும் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புடனும் நடக்க வேண்டும். |
பிறக்கின்ற புத்தாண்டு கொரோனா இல்லாத ஆண்டாகப் பிறக்க வேண்டும் என்பதே அனைவரினதும் பிரார்த்தனையாக இருக்க வேண்டும், என்றார்.