மலர்ந்துள்ள 2021 ஆம் ஆண்டில் தமிழையும் சைவத்தையும் கட்டிக் காக்கும் முகமாக சைவ மகாசபை 5 அம்ச கோரிக்கைகளை சகல உள்ளூராட்சி மன்றங்கள் இடமும் கொ...
மலர்ந்துள்ள 2021 ஆம் ஆண்டில் தமிழையும் சைவத்தையும் கட்டிக் காக்கும் முகமாக சைவ மகாசபை 5 அம்ச கோரிக்கைகளை சகல உள்ளூராட்சி மன்றங்கள் இடமும் கொடுத்துள்ளது.
1.பெயர் பலகையில் தமிழுக்கு முன்னுரிமை .தமது ஆளுகைக்குபட்ட பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் சகலவற்றினதும் பெயர் பலகையிலும் தமிழ் கட்டாயம் இடம் பெறுவதையும் முன்னுரிமையாக இருத்தலையும் உறுதி செய்ய வேண்டும்.
2.குளங்கள், கால்வாய்கள் புனரமைப்பு, நிலத்தடி நீர் சேமிப்பு பொறிமுறைகள், குழாய் கிணறு மட்டுப்பாடுகள் உள்ளடக்கிய சிறந்த நீர் முகாமைத்துவ கொள்கையை செயற்படுத்தி வெள்ளப் பெருக்கையும் குடிநீர் தட்டுப்பாட்டையும் தவிர்க்க வேண்டும்.
3.கொரோனா கால இடர்பாடுகள் / தரகுக் கொடுமைகளை எதிர்நோக்கும் விவசாயிகளிற்கு திறந்த வெளிகளில் சமூக இடைவெளி பேணத்தக்க வகையில் உழவர் சந்தைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
4.சிதைவுறும் கலாச்சார , சமய, மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.பசுமை தாய் மண்ணை உருவாக்கும் வகையில் சிறந்த கழிவு முகாமைத்துவம், மரநடுகை உந்து சக்தி அளிக்க வேண்டும்
உள்ளூராட்சி விடயதானங்களின் கீழ் வரும் மேற்படி கோரிக்கைகளை அனைத்து உள்ளூராட்சி சபைகளிடமும் அகில இலங்கை சைவ மகா சபை வேண்டுகோளாக உலக ஒழுக்கின் புதிய ஆண்டாக 2021 மலர்கின்ற இத்தருணத்தில் விடுக்கின்றது.
2021 இல் கொரோனா இடர் நீங்கி மண்ணில் நல்ல வண்ணம் அனைவரும் வாழ இறை சிவனை பிரார்த்தித்து நிற்கின்றோம் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.